Search This Blog

Tuesday, 6 October 2020

திருமந்திரம் -- சிவ நிந்தை

திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- சிவ நிந்தை:

------------------------

அப்பகை யாலே அசுரருந் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே

-------------------------

விளக்கம்:

 🌟அறியாமையால் வரும் அகங்காரத்தால் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள்.

---------------

 🌟சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய இயலாது.

---------------

 🌟அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்

*******



No comments:

Post a Comment