Search This Blog

Friday, 11 September 2020

திருமூலர் எதைக் கண்டு இரங்குகின்றார்?

 திருமந்திரம் -- ஏழாம் தந்திரம் -- கேடுகண்டிரங்கல் -- பாடல் 6:

💐💐💐💐💐💐

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து

இன்பத்து ளேதிளைக் கின்றது இதுமறந்து

துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று

துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே

💐💐💐💐💐💐

விளக்கம்:

ஆன்மா ஆனந்தமயமானது😇.  பிறக்கும் பொழுதும், வாழும் பொழுதும், உணரும் பொழுதும் ஆன்மா பரமானந்தத்திலேயே இருக்கின்றது.  

------------------

ஆனால் அதை மறந்து

------------------

அறியாமையால் தாம் துன்பத்திலே😑 மூழ்கியிருப்பதாக கருதிக்கொண்டு அதனைப் போக்க உடை🧥🥻, உணவு🥖🍞 என்று அலைந்து, அவற்றைப் பெற வேண்டி அல்லற்படுகின்றனர்.  இது இரங்கத்தக்கது😢 என்று திருமூலர் கூறுகின்றார்



No comments:

Post a Comment